Sunday, December 18, 2011

மின்னும் இயற்கையெல்லாம் 
உன்னழகைக் காட்டுதடி 
எண்ணமெனும் தேன்கூட்டில் 
இன்பக் கனல் மூட்டுதடி
வான நிலாப்பெண்ணை 
வட்டமிட்டு மேகமொன்று 
மோன முகத்தினிலே
முத்தமிட்டுப் போகுதடி
துள்ளிவிளும் நீரலையில்
வெள்ளிமலர் பூத்ததடி
வள்ளியுனை எதிர்பார்த்த
மெல்லுடலும் வேர்த்ததடி
இல்லத்தில் நீயிருந்தால்
இருள்வர அஞ்சுதடி
மெல்லத் தமிழ் உனது
சொல்லில் வந்து கொஞ்சுதடி......

1 comment:

  1. ஏலதா
    வனுக்கு ஏன்டா பிளாக்கர்

    ReplyDelete