Sunday, December 18, 2011

பிரம்மன் கனவில் கண்டான் உன்னை அன்று
நான் உன்னை நேரில் கண்டேன் இன்று
உன்னை கண்ட நொடிமுதல்
என் இமைகள் இமைக்க மறந்துவிட்டன
நீ பிரம்மனின் பிரம்மாண்ட படைப்பா ?
அல்லது மோனாலிசாவுக்கு மோடலாக பிறந்தவளா ?
உன்னை சிற்பி செதுக்காத சிலை என்பதா ?
ஓவியன் வரையாத ஓவியம் என்பதா ?
கவிஞன் எழுதாத கவிதை என்பதா ?
ஒன்றுமே புரியவில்லை என் இளமைக்கு ?
உன் உதட்டில் உள்ள தடங்கள்
எந்த மொழி கொண்ட எழுத்துக்கள்
அதை வாசித்து பயில்வதற்கு
வரம் ஒன்று கொடுப்பாயா எனக்கு ?

2 comments: